மீண்டும் டூ பீஸ்! நழுவிய நயன்!!
இந்நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில், வலிய வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் நயன்தாரா
அஜித் நடித்த பில்லா படத்தில் டூ பீஸ் உடையணிந்து ரசிகர்களை கிளுகிளுப்பேற்றிய நயன்தாரா, அதற்கு பிறகு வேறு எந்த படத்திலும் டூ பீஸ் உடையில் நடிக்கவில்லை. சத்யம் படத்தில் விஷாலுடன் ஜோடி போட்ட நயன்தாரா மிகவும் நெருக்கமாக நடித்து இளைஞர்களை சூடேற்றி விட்டார்.
சமீப காலமாக இழந்த அழகை மீட்பதற்கு ஆயுர்வேத சிகிச்சையில் இறங்கியிருக்கும் நயன், தனது காதலன் பிரபுதேவாவுடனான நெருக்கத்தையும் குறைத்துக் கொள்ளவில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிக்கு ஒரு படத்தில் நடித்து வரும் அவர் புதிய படங்களை தவிர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. அம்மணி விரைவில் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க இருப்பதால்தான் கமிட்மெண்ட்டுக்கு கல்தா கெடுத்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில், வலிய வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் நயன்தாரா. கன்னட முன்னணி நடிகர் ரவிச்சந்திரன், தனது புதிய படத்தில் நயன்தாராவை நாயகியாக விரும்பி, தூது விட்டிருக்கிறார். கதையை கேட்ட நயன், டூ பீஸ் காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது, கிளாமரான காட்சிகள் இருக்கக்கூடதது என்று கூறி அந்த படத்தை மறுத்து விட்டாராம். எப்படியோ..., முன்பு வெளியான செய்தி சீக்கிரமே உண்மையாயிடும் போலிருக்கு!