பிச்சைக்காரி வேடத்தில் கீர்த்தி சாவ்லா
பிகினி அணிந்து கீர்த்தி சாவ்லா நடித்தது பத்திரிகையில் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அது பரபரப்பாகவில்லை. அதனால் இனி கிளாமராக நடிக்க மாடடேன் என்று அறிக்கையும் விட்டார். ரசிகர்கள் மீது கோபம் இருக்கலாம். அதற்காக இப்படியா?
குலசேகரனும் கூலிப்படையும் படத்தில் கீர்த்தி சாவ்லா கண் தெரியாத பிச்சைக்காரியாக நடிக்கிறார். நடிக்க ஸ்கோப் உள்ள வேடம் என்றாலும் இந்த கேரக்டர் ஒன்றும் அத்தனை ராசியானது அல்ல.
மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் ப்ரியாமணி. ஒரு படத்தில் பிச்சைக்காரியாக தத்ரூபமாக நடித்தார். அதன்பிறகு வாய்ப்பு மழை தூறலாக சுருங்கியது. பத்மப்ரியாவும் ஒரு படத்தில் பிச்சைக்காரி வேடம் ஏற்றார். இப்போது மலையாளத்தில் அவரை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டியதாகிவிட்டது.
நான் கடவுளில் பூஜா கண் தெரியாத பிச்சைக்காரி. பாலாவே அடுத்தப் படத்தை தொடங்கிய பிறகும் பூஜாவுக்கு இன்னும் நல்லதாக ஒரு வாய்ப்பு வரவில்லை.
கீர்த்தி சாவ்லா நடித்த நினைவில் நின்றவள், திருமதி தமிழ், அகராதி என கால் டஜன் படங்கள் நிலுவையில் உள்ளன. இதில் பிச்சைக்காரியாக வேறு நடிக்கிறார். என்னவாகப் போகிறதோ?