Puthumai Website -புதுமை வலைத்தளம்  

சப் டைட்டில் போடவா : கௌதம்மேனன் காட்டம்

Picture
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை சோனி மியூசிக் ஜவெண்டர் ஈவன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சி சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்றது. இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன், பாடகர்கள் நரேஷ் ஐயர், அல்போன்ஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

சிம்பு வருவார் என்று சொன்னதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர். கடைசிவரை அவர் வராததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். ரசிகர்களில் ஒருவர் ‘உங்கள் படத்தின் கதாபாத்திரங்கள் பேசுவது கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கு கேட்பதில்லை... அவ்வளவு மெதுவாக பல நேரங்களில் பேசுகிறார்களே...?’ என்று கௌதம்மேனனிடம் கேள்வி எழுப்ப, ‘அப்படின்னா இனிமேல் கேரக்டர் பேசும் போது சப்டைட்டில் போடட்டுமா...?’ என்று காட்டமாக திருப்பிக் கேட்டார் அவர்.

மேலும் படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர்.