Puthumai Website -புதுமை வலைத்தளம்  

கமல் ஜோடியானது மகிழ்ச்சி : திரிஷா

Picture
திரிஷாவிடம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் கைவசம் உள்ளன. அவர் நடித்த 'நமோ வெங்கடேசா' தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சம்பளம் ரூ. 1 கோடியாக உயர்ந்துள்ளது. புது தெலுங்கு படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்போன தயாரிப்பாளரிடம் இந்த தொகையை சொன்னாராம்.

'டான்சீனு' என்ற தெலுங்கு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

சிம்பு ஜோடியாக நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் இருவரும் உதட்டோடு உதடு முத்தமிட்டு நடித்துள்ளனர். “காட்ட மீட்டா” மூலம் இந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது.

இந்த நிலையில் கமல் ஜோடியாக 'யாவரும் கேளிர்' என்ற படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளர். இதில் நடிக்க நயன்தாராவும் முயற்சி செய்தார்.

ஆனால் கமலும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் திரிஷாவை தேர்வு செய்து விட்டனர். முதல் தடவையாக கமலு டன் ஜோடி சேருகிறார்.

கமலுடன் நடிப்பது பற்றி திரிஷா கூறியதாவது,

கமல் அழைப்புக்காக காத்து இருக்கிறேன். அவருடன் ஜோடியாகும் வாய்ப்பு கிட்டினால் உலகத்திலேயே நான்தான் மகிழ்ச்சியான பெண்ணாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திரிஷாவை ஏற்கனவே “மர்மயோகி” படத்தில் கதாநாயகியாக்கினார் கமல். ஆனால் நிதி நெருக்கடியால் அப்படம் நின்று போனது. எனவே “யாவரும் கேளிர்” படத்தில் ஜோடியாக்கியுள்ளார்.


Back To Home



இந்த செய்தியை படித்தவர்கள்