"ரஹ்மானியா' இசை நிகழ்ச்சி
.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ரோஜா' முதல் "விண்ணைத்தாண்டி வருவாயா' வரையிலான படங்களிலிருந்து பாடல்கள் இடம்பெறுகின்றன
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர்கள், வரும் 28}ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "ரஹ்மானியா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மைதானத்தில் பிப்.28}ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், ஸ்ரீனிவாஸ், சுஜாதா, சுரேஷ் பீட்டர்ஸ், நரேஷ், ஹரிசரண், ஸ்வேதா மோகன், சுவி சுரேஷ், திமோதி மதுகர் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பங்கேற்று பாடுகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ரோஜா' முதல் "விண்ணைத்தாண்டி வருவாயா' வரையிலான படங்களிலிருந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. சரண் இன்கார்ப்பரேஷன் மற்றும் ஜேஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. இதன் மூலம் வரும் தொகை, மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக நடத்தப்படும் வி}எக்ùஸல் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் லேண்ட்மார்க், ஒடிஸி வளாகங்களில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 9841016161, 9840047101 என்ற மொபைல் எண்களைத் தொடர்புகொள்ளலாம்