Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ரஜினிஒருகாமெடியர்: ஜாக்குவார்தங்கம்

Picture
கலைஞருக்கு நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அஜீத்தின் கருத்துகளுக்கு, கண்டனம் தெரிவித்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் வீடு தாக்கப்பட்டது. இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம், அஜீத் மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் என்னையும், என் குடும்பத்தாரையும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் உள்ளனர். கொலை செய்வேன் என்று மிரட்டிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்ற போலீசார் அஜீத் மேலாளர் உள்பட 18க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அமிராமிபுரத்தில் உள்ள அஜீத்தின் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்தது பற்றி ஜாக்குவார் தங்கம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
 
நேற்று அதிகாலை எனது வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக புகார் தெரிவித்தேன். இது வரையில் அஜீத்குமார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
 
கேள்வி:  அஜீத் கூறிய கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து உள்ளாரே?
 
பதில்:  ரஜினி ஒரு காமெடியர். தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார். கர்நாடகா சென்று விட்டால் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுவார். இரண்டு மாநில மக்களிடமும் மன்னிப்பும் கேட்பார். திடீரென இரட்டை விரலை காட்டி இரட்டை இலைக்கு ஓட்டு போடச் சொல்லுவார். எனவே ரஜினி பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.