பாவனா! மாப்பிள்ளை வேட்டை
இப்போது அம்மணிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மலையாள சேச்சி நடிகைகள் வரிசையாக திருமணம் செய்து கொள்வதை பார்த்ததும், பாவனாவின் பெற்றோருக்கும் மகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போலும்.
இப்போது அம்மணிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் புரோக்கர்களிடம் சொல்லி பாவனாவுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்தெடுக்கப் போகிறார்களாம் பெற்றோர்.
தற்போது அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருக்கும் பாவனாவிடம் இதுபற்றி கேட்டால், சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். எனக்கு கணவராக வருபவர்கள் என்னை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எதுவும் நம் கையில் இல்லை, என்று கூறுகிறார்.
நடிகைக்கு மாப்பிள்ளையாக வேண்டுமானால் வெளிநாட்டு தொழிலதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினீயராகவோ இருக்க வேண்டும், என்பது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன?! எத்தனை நடிகைகளின் கல்யாணத்தை பார்த்திருப்பார்கள் நம் ரசிகர்கர்கள்!!
கொசுறு தகவல் : துபாய் மாப்பிள்ளையை திருமணம் செய்து சில நாட்களே குடும்பம் நடத்திய நடிகை காவ்யா மாதவன், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது மலையாள படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தாலும், விவாகரத்து வாங்கிய கையோடு இரண்டாவது கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம். அவருக்கும் மாப்பிள்ளை வேட்டை ஆரம்பமாகி விட்டது.