Puthumai Website -புதுமை வலைத்தளம்  

நடிகைகளுக்கு நாவடக்கம் வேண்டும் : அசின்

Picture
இந்தி திரையுலகில் சக நடிகைகளின் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டு வருகிறார் அசின். அவரை பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதற்கெல்லாம் ஆவேசப்படாமல், அமைதிகாத்திருக்கிறார். இது பற்றி அசின் சொல்கிறார்.

பெண்களுக்கு நாவடக்கம் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். சினிமா நடிகைகளுக்கு அது ரொம்ப முக்கியம். கண்டதையெல்லாம் பேசக்கூடாது. எனக்கு கோபமூட்டும் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. ஆவேசமாக கத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

மறுநொடியே கோபத்தையும் நாவையும் அடக்குகிறேன். நடிகைகள் கோபப்பட்டு ஏதேனும் பேசினால் எதிர்காலமே இல்லாமல் செய்து விடுவார்கள். எனவே கோபப்படுவதை தவிர்க்கிறேன். நாவடக்கத்தையும் கடைபிடிக்கிறேன்.

உணவு விஷயத்திலும் நாவை அடக்க வேண்டும். ருசியான உணவுகளை பார்த்தால் நாவில் நீர் ஊறும் கண்டதை சாப்பிட்டால் உடலின் எடை கூடிவிடும்.

எனவே உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். மேக்கப் போட ஆரம்பித்தால் உடல் அழகையாவது காக்க வேண்டும். அதற்காக ருசியான உணவுகளை தியாகம் செய்யத்தான் வேண்டும்.

தினமும் “ஜிம்” போகிறேன். உடற்பயிற்சி செய்வதில் மட்டும் சோம்பேறித்தனம் காட்டமாட்டேன். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். பழங்கள், காய் கறிகள் சாப்பிடுகிறேன்.