Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ஜாக்கிசான் மாஸ்டருக்கு ஷாக்

Picture
ஆறுமுறை உயிர்போகும் ஆபத்திலிருந்து தப்பித்தாராம் பரத்

உயிர் தப்பிய விஷயத்தில் இயேசுநாதரைவிட இரண்டு மடங்கு அதிகம் என பரத்திற்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் ‘தம்பிக்கு இந்த ஊரு' தயாரிப்பாளர்.

படத்தின் கடைசி பத்து நிமிடங்களில் இடம்பெறும் சண்டை காட்சியில் டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்தபோது ஆறுமுறை உயிர்போகும் ஆபத்திலிருந்து தப்பித்தாராம் பரத். ஜாக்கிசான் படங்களுக்கு பணிபுரியும் ஜிம்மிலோதான் அந்த காட்சியை உருவாக்கினாராம். படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன் சண்டை காட்சியில் நடிக்கும் நடிகருக்கு ரோப்போ டூப்போ தரமாட்டேன் என்ற கண்டிஷனுக்கு பிறகே ஒப்புக்கொண்ட ஜிம்மிலோ பரத்தின் ஈடுபாட்டை பார்த்து பாராட்டினாராம்.

சுண்டு விரல் அடிபட்டால்கூட பப்ளிசிட்டி தேடிக்கொள்பவர்களுக்கு மத்தியில், தான் எடுத்த ரிஸ்கை சொல்லவேண்டாம் என பரத் பணிவு காட்டியதுதான் இதில் பியூட்டி என்கிறார் தயாரிப்பாளர்.ஃபைட் மட்டுமின்றி சொந்தக்குரலில் ஒரு பாட்டும் பாடியுள்ள பரத்,தொடர்ந்து வாய்ப்பு வந்தால் பாட ரெடி என்றார்.

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பிறகு யாருமே செல்லாத ஒரு தீவில் பாடலொன்றை படமாக்கினார்களாம். பக்கத்தில் நாயகி சனாகான் மட்டும்தான் இருந்தாரா? என கேட்டால், இல்ல சார் தயாரிப்பாளரும் இருந்தார் என சிலேடையாக சிரித்தார் பரத்.