Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ஆந்திராவில் ஆயிரத்தில் ஒருவன் அசத்தல் வெற்றி!

Picture

தெலுங்கில் யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் ஆயிரத்தின் ஒருவன்


தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத ஆயிரத்தில் ஒருவன் படம் ஆந்திராவில் அசத்தலான வெற்றியை பெறறிருக்கிறது. அங்கு படம் ‌திரையிடப்பட்ட நான்கே நாட்களில் ரூ.2 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்திருக்கிறது ஆ.ஓ.!


டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில், பருத்திவீரன் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் நடித்த படம் ஆயிரத்தில்ஒருவன். கடந்த பொங்கலன்று திரைக்கு வந்த இப்படம் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கிறது என்று ஓரு சாராரும், படம் குப்பை என்று இன்னொரு சாராரும் கருத்து தெரிவித்தனர். விமர்சனங்களும் படத்தை ஆஹா ஓஹோ‌வென புகழவில்லை.


படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்ததால் சுமார் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கிடையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக செல்வராகவனுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் வருத்தத்தில் இருந்த செல்வராகவன் சந்தோஷப்படும் வகையில், ஆந்திராவில் ஆ.ஓ., ஆஹோ ஓஹோ ஆகி விட்டது.


தெலுங்கில் யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் ஆயிரத்தின் ஒருவன் ரீலிஸ் செய்யப்பட்டது. தமிழில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை இருந்த காட்சிகளை தெலுங்கிற்காக தேவையில்லாத காட்சிகளை நீக்கி 2 மணி நேரமாக குறைத்து திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களை வெகுவாக கவராத ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கு ரசிகர்களை ரொம்ப‌வே கவர்ந்து விட்டது. படம் வெளியான நான்கே பாட்களில் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.


தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தால் தெலுங்கில் கார்த்தியின் மவுசும் கூடியிருக்கிறது. இதனால் தமிழில் செம ஹிட் ஆன பருத்தி வீரனை தெலுங்கில் டப் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது எக்ஸ்ட்ரா தகவல்